எத்தனை சத்தமாக
ஓங்கி ஒலிக்கிறது
நெரிக்கப்பட்ட
உன்குரல்வளையின்
நொறுங்கல்கள்!
மவுனமாய் பேசியிருக்கிறாய் மரணத்தோடும் கூட!
விளக்குகளை கொண்டாடும்
விக்கிரகங்கள் மத்தியில்
விடிவெள்ளிகளை கண்டுரசித்திருக்கிறாய்!
எரித்தபின்னும் உன்மீது தூவப்படுகிறது
சாதியத்தின் சாம்பல்!
ஆய்வுசெய்ய திறமை
இல்லையாம் உனக்கு
ஆச்சர்யாவின் அழுகிய வாதம்!
துரோகிகள் துரோணர்களாயிருக்கும்வரை ஏகலைவன்கள் வெற்றியென்பது தூக்குக்கயிறே!
இரங்கற்பா இயற்றுவதில்
இந்தியதேசம் வல்லரசுதான்
இன்னும் சிலநூறாண்டுகளுக்கும்
போய்வா வெமுலாவே....
ஒதுக்கீடுதான் உன்உயிர்குடித்தது. உதவித்தொகையேனும் உருப்படியாய் கிடைக்கச்செய்யுமா உயிர்குடித்த உயர்கல்விநிறுவனங்கள்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக