வெள்ளி, 22 ஏப்ரல், 2016

வைகறைக்கு ஏன் அஸ்தமனம்

இனி எங்கு
வைத்திருக்கபோகிறாய்
உன் புன்னகையை? 

இந்த வீதியில்  உனை பார்க்காமல் போன பொழுதுகள்
இப்படி நிரந்தரமாகக்கூடும்
என நினைக்கவேயில்லை.

வைகறை வைகறை
எப்போதுமே போனாய் அஸ்தமனத்திற்குள் ?

இன்னும் அந்த கணங்கள் கனமாய்அமர்ந்திருக்கிறது மனதிலும் விழியிலும்!

ஜெய்குட்டிக்காகவேனும் இன்னும் நீ இருந்திருக்கக்கூடாதா?

வெட்டப்பட்ட மரத்தை கடப்பதற்கு மனபிறழ்வாயிருக்கவேண்டும் என்றாயே வீதியில்!

உன் மரணத்தை கடப்பதற்கு மனப்பிறழ்வாய் தானிருக்கவேண்டும்  இந்த இலகுமனமும்!