திங்கள், 5 ஆகஸ்ட், 2013


பேசும் ஆன்மா

உன் சிவப்பு மையினால்
      எழுதப்பட்ட சிறப்புக் கவிதை
என் மௌனங்களில் பயணிக்கிறேன் - நாள்தோறும்
     பாதைகள் ஏதுமில்லாமல் !

திசைகளை அறியாமலே - என்

     அசைவுகளை ரசிக்கிறாய்
உறங்கிக்கொண்டே பேசுகிறேன்
    உறங்காத இதயத்துடன் !

தென்றலின் ஸ்பரிசம் வெளியில்தான் 
உணர்கிறேன் என்னுள்ளும் 
உன் சுவாசத்தின் ஸ்பரிசத்தால் !