வெள்ளி, 4 மார்ச், 2016

பயணியா

புயலாகவோ காற்றாகவோ
சட்டென கடந்துவிட
உன்னால் முடிகிறது
பயணங்களை காரணம்சொல்லி...

பிழைப்பைத்தேடி
பிரயாணிக்கும் உன்
காலடிகளுக்கு கேட்குமா?
இதயத்தின் பரிதவிப்பு நொடிகள்

உன் மூச்சுக்காற்றை முழுவதுமாக தழுவி முக்தியடைய தவமாய்
என் உயிர்குழலும் உதிரக்குழாய்களும்!

கடவுளை சந்திக்க
காத்திருக்கும் பக்தனாய்
காதலை சுமந்து காத்திருக்கிறேன்
உன் பயணப்பாதைகளெங்கும்

உன் பார்வையின் எடையில்
சிலநேரம் சிறகாய்,
பலநேரம் சருகாய் 
என்நேசம்!

எனினும் உன்னைச்சுமந்து
பறக்க எத்தனிக்கிறேன்
சாத்தியமாகிறது பறத்தலென்பது
இம்முடமான பறவைக்கும்!

1 கருத்து: