பனிரெண்டு மாதங்கள்தான்
மாற்றமேதுமில்லை
எண்களிலும் எண்ணத்திலும் ஏதோ கொஞ்சமாய் நிகழ்வதைவிட
நாட்காட்டிகள்
முகம்மின்ன ஒவ்வொருநாளாய் உடல்கிழியும் பரிதாபம்!
பட்டாசுகளை கொளுத்தி மத்தாப்புகளை சிதைக்குகொடுத்து சிரித்துமகிழும் சீர்மரபினர் நாம்!
பிறப்புகளை பற்றி பெரிதாய் எண்ணாத நாமா இறப்புகளைபற்றியும்
இழப்புகளைபற்றியும்
பதைபதைக்கப்போகிறோம்
இருளை விலக்காத விஞ்ஞானம்
இரவைவெளிச்சமாக்க விந்தைவிந்தையாய் வெளிக்கொணர்ந்தது வெகுமதியென
வெளிநாட்டவர்
கொண்டாட்டங்களை!
முந்நூறு நாட்கள்
மூன்றுமாதங்கள்
மூழ்கடித்த அத்தனை மரணவெள்ளங்களை மறந்தவர்கள்நாம்
மரக்கட்டைகளாய் சுட்டு எரிக்கப்பட்ட
மறத்தமிழர்கள்
திரையுலகில் மின்னிய ஒளிவிளக்குகள்
அணைந்துபோய் ஏற்றப்பட்ட ஆழ்ந்த இரங்கல்கள் மெழுகுவர்த்திகள்!
வியாபம் ஊழல் முதல் விஷ்ணுபிரியா வரை அவிழ்க்கமுடியா அவமான முடிச்சுகள்!
பசுவதைக்காக படுகொலை அரங்கேற்றம்
எதிர்த்து பேசிவிடுமோ எனும்ஐயத்தில் எரித்துக்கொல்லப்பட்ட தலித்தளிர்கள்!
மாதொருபாவம் செய்துவிட்டதாய்
அகதியாக்கப்பட்ட அவலம்
பேனாமுனை முறிக்கப்பட்டு
கருத்து கனவான்கள் கழுத்தறுக்கபட்ட
கண்ணியமிக்க பூமியிது
இந்தியா வல்லரசாகுமா என ஆசைக்கனவு கண்ட கலாமை கரைத்துவிட்டுதான் அறமே இல்லாத அரசாட்சி!
பிட்டு அடித்தே பாடம் கற்றுக்கொடுத்த பீகாரின் பேரவலம்
சாலைகளிலும்
உறங்கமுடியாமல் குரல்வளைநெரிக்கும்
சல்மான்களின் குறட்டைசத்தம்!
அப்பப்பா
அத்தனையும் துடைப்பதற்காக வந்தது ஒரு பெருமழை மனிதப்பிழைஎனும் அடைமொழியோடு!
அடங்கியதா இந்த உலகம்
அழுக்ககலாமல் அழகாக்கிகொள்ளும் அலங்காரம் படித்தவர்கள் நாம்!
வருக புத்தாண்டே வழக்கம்போல
தண்ணீரில் மூழ்கி
தன்னிலை மறக்க
எப்போதும் போல
வருக வருக!