இனி எங்கு
வைத்திருக்கபோகிறாய்
உன் புன்னகையை?
இந்த வீதியில் உனை பார்க்காமல் போன பொழுதுகள்
இப்படி நிரந்தரமாகக்கூடும்
என நினைக்கவேயில்லை.
வைகறை வைகறை
எப்போதுமே போனாய் அஸ்தமனத்திற்குள் ?
இன்னும் அந்த கணங்கள் கனமாய்அமர்ந்திருக்கிறது மனதிலும் விழியிலும்!
ஜெய்குட்டிக்காகவேனும் இன்னும் நீ இருந்திருக்கக்கூடாதா?
வெட்டப்பட்ட மரத்தை கடப்பதற்கு மனபிறழ்வாயிருக்கவேண்டும் என்றாயே வீதியில்!
உன் மரணத்தை கடப்பதற்கு மனப்பிறழ்வாய் தானிருக்கவேண்டும் இந்த இலகுமனமும்!