வியாழன், 24 மார்ச், 2016

ஏக்கங்களின் விதை

இமைகள் நீங்காத
உறக்கம் வந்தால் போதுமானது
இரவை கடப்பதற்கு!

ஈரத்துணியில் நீர் உறிஞ்சும் காற்றினைப்போல
உன் நினைவென் உறக்கத்தை
உறிஞ்சிக்குடிக்கிறது சலனமின்றி!

ஓடும் சக்கரங்களெனினும்
ஒட்டி முத்தமிடும் தண்டவாளமாய்
ஒற்றி ஒற்றியெடுக்கிறேன்
உன் கனவு உதடுகளில்

எப்போதேனும்
வந்தமர மாட்டாயா
என் காதோரம்
கிசுகிசுத்து குழல்கோதும்
காற்றென?

காத்திருக்கிறேன்
பாலைதான் பயணமென
பலபேர் பகன்றாலும்
பனித்துளியேந்தும் கள்ளிச்செடியின்
முள்குவிந்த இலையென!

படம்  உதவி    உமையாழ் பெரிந்தேவி

1 கருத்து: