வெள்ளி, 22 ஏப்ரல், 2016

வைகறைக்கு ஏன் அஸ்தமனம்

இனி எங்கு
வைத்திருக்கபோகிறாய்
உன் புன்னகையை? 

இந்த வீதியில்  உனை பார்க்காமல் போன பொழுதுகள்
இப்படி நிரந்தரமாகக்கூடும்
என நினைக்கவேயில்லை.

வைகறை வைகறை
எப்போதுமே போனாய் அஸ்தமனத்திற்குள் ?

இன்னும் அந்த கணங்கள் கனமாய்அமர்ந்திருக்கிறது மனதிலும் விழியிலும்!

ஜெய்குட்டிக்காகவேனும் இன்னும் நீ இருந்திருக்கக்கூடாதா?

வெட்டப்பட்ட மரத்தை கடப்பதற்கு மனபிறழ்வாயிருக்கவேண்டும் என்றாயே வீதியில்!

உன் மரணத்தை கடப்பதற்கு மனப்பிறழ்வாய் தானிருக்கவேண்டும்  இந்த இலகுமனமும்!

2 கருத்துகள்:

  1. ஆம் சகோதரி! அன்று அவரது வீட்டில், உறவினர் மடியில் அந்த பிஞ்சுக் குழந்தை களைப்பில் தூங்கிக் கொண்டு இருந்தபோது மனம் அதன் எதிர்காலம் எண்ணி கனத்தது.

    பதிலளிநீக்கு
  2. அவரது குடும்பத்தைப் பற்றி படித்தபோது மனம் இன்னும் வேதனைப்பட்டது. இச்சூழலை எதிர்கொள்ளும் நிலையையும், தைரியத்தையும் அவருடைய குடும்பத்தார் பெறவேண்டும். பேரிழப்பு.

    பதிலளிநீக்கு