புதன், 23 ஜூலை, 2014

வாழ்க்கை


வாழ்க்கை



இலேசான இதயம்தான் எவ்வளவு 
கனமான எண்ணங்களை எளிதாக சுமக்கிறது 

எண்ணங்களின் சுமைதாங்காமல் 
இதயமும் அழுத்துகையில் 
ஆசுவாசப்படுத்திக்கொள்ள 
வெளியில் வந்து வந்து போகிறது.... 
சூடான சுவாசக்காற்றும் ! 


வெளிவந்த சுவாசத்தை விட்டுவிட முடியாமல் 
முந்திகொண்டுவருகிறது 
திணறலுடன் மூச்சுக்காற்றும்.... 


எல்லையில்லா வானம்கூட 
எதற்கும் ஆசைப்படுவதில்லை 

ஆசை கொண்ட மனிதனுமே 
அத்தனையும் அடைந்து விடத்தான் 
சிறு இதயமும் துடிக்கிறதென 
சிறு பிள்ளைப்போல் நினைத்துவிட்டான் 

கொள்ளளவு குறைவுதான் என்றாலும் 
கொட்டிடத்தான் தேடுகின்றான் 
கோடி கோடி வேண்டுமென்று 
வீதிஎங்கும் ஓடியோடி.... 

அலைந்து அலைந்து திரிந்த காற்று 
கண்ணில்பட்டவன் காதில் 
ஊதிவிட்டுப்போனது ஒற்றைச்சேதி.! 

உனக்குள் இருக்கும் நான் 
உட்புகுந்தவீட்டை விட்டு 
வெளியேறினால் 
நீ நாறின பிணமடா..!! 
இதை என்று உணரும் 
உன் மனமடா....!!! 



கவிதாயினி நிலாபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக