வியாழன், 24 ஜூலை, 2014

தரிசனம்





ஒவ்வொரு முறையும்
தெருவில் வலம்
வரும்போதெல்லாம்
உன்னை ஒருமுறையாவது
வலம் வரவேண்டுமென்ற
வேண்டுதலிலேயே
கடவுளுக்கும்
விடிந்துவிடுகிறது இரவு


கடவுளுக்கும் வருத்தம்தான்
கருவறைக்குள் அமர்ந்துகொண்டு
சுமக்காமல்
உன்னை நிற்கவைத்து
பார்ப்பதற்கு ....


கடவுளும் தவம் செய்கிறார்
உன்னை பார்க்காமல்
வேறு யாரையும் பார்க்ககூடாது
என்ற வரம்கேட்டபடி...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக