புதன், 23 ஜூலை, 2014

பிரிவு







நிஜமாய்த்தான் சொல்கிறதா நிழல் .... 
என்னைவிட்டு பிரிந்துபோ என்று ? 

பேசாதே...!!! 
இந்த ஒற்றை வார்த்தை கொடுக்குதடி ..... 
இரட்டை ஆயுள் தண்டனையை 

உன் மௌனம் மெல்ல மெல்ல 
எனை கொண்டு சேர்க்குதடி 
மரணமென்னும் மணற்குழியில்.... 

உன் இதயத்தில் என்னைத்தான் 
ஒளித்துவைத்தாய் என்றிருந்தேன் 
இப்போது தெரிந்ததடி 



நான் உன் 
உதட்டில் கூட ஒலிக்கவில்லை 
உண்மையான வார்த்தைகளாய் .... 

துரத்தி வந்த என்னை விட்டு 
தூரமாய் போகுதடி 
இரக்கமில்லா உன் இதயம்... 

நான் இருந்திடவா இல்லை 
இறந்திடவா 
இரண்டில் ஒன்று சொல்லிடடி 
உன் வார்த்தை 
அமுதத்தால் ............ 

என்னுயிர் தோழிக்காக..... 


கவிதாயினி நிலாபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக