புதன், 23 ஜூலை, 2014

ஒத்திகை


ஒவ்வொரு முறையும் 
பூக்களெல்லாம் 
ஒத்திகை பார்க்கின்றன 
ஒருமுறையாவது 
உன்னைப்போல் 
அழகாக சிரித்துவிடவேண்டுமென்று..... 

ஒத்திகையிலேயே 
தோல்வியுற்று 
மரணமடைந்துவிடுகின்றன 
மண்ணில் 
உதிர்ந்தபூக்களாய்................ 

நிலாபாரதி **************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக