புதன், 23 ஜூலை, 2014

பாலியல் வன்கொடுமை


பாலியல் வன்கொடுமை








ஆடைகுறைத்து போகையிலும் 
அசிங்கம் என்பதில்லையடா 
ஆணுக்குமட்டும்...!!! 

போர்த்திக்கொண்டு போகையிலும் 
பின்தொடர்ந்து நிழல் வருகிறதே 
பின்புத்திக்காரர்களின் 
பிதற்றல் மொழிபேசிக்கொண்டே.... 


கழுத்தறுத்து கொன்றிருந்தால் 
கண்ணீரோடு செத்திருப்பேன் 
கருவறுத்து கொன்றுவிட்டாய் 
உயிர் கதற கதற சாகிறேனே .... 


பூக்களாய் சிரிக்கும் எங்களை 
பூஜிக்க வரம் கேட்கவில்லை 
காயப்படுத்தி கசக்கவும் 
அழிக்கவும் வேண்டாம் என.... 
கடவுளையே வேண்டுகின்றேன் 


ஆடைமாட்டி கொண்டாலும் 
உன்னிடம் மாட்டி கொண்ட 
பூச்செண்டாய் 
போவதற்கு வழியின்றி 
பொசுங்கித்தான் போனது 
முல்லையரும்பின் மூச்சுக்காற்றும் 

கொதித்தெழுந்தது போதும் 
கொளுத்திவிடுங்கள் 
பூவரும்புகளை கொள்ளையிடும் கொடியவர்களை....... 

தூக்கிலிடக்கூட துரத்த வேண்டாம் 
தூக்கிவிடுவோம் 
இந்த உலகத்தின் முகவரியிலிருந்து.....!!! 


பாரத பூமி என்று சொல்லிசொல்லி 
பழம்பெருமை பேசுவோரே 

பாரதி பூமி என்றே முழங்கிடுங்கள் 
அப்போதாவது விளங்கிடுமே 
என் அன்னைக்கும் அப்பாவுக்கும் 
பெண்ணிற்கும்வீரம் வேண்டுமென்று..... 


கவிதாயினி நிலாபாரதி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக