கொடுத்தே கொடுத்தே
சிவந்துபோன
அங்கததேசத்துக் கர்ணனாய்...
உன்
ஆசை முத்தங்களை
கொடுத்தே கொடுத்தே
சிவக்கவைக்கிறாய்
என் அங்கதேசத்தை.....
அழுக்காகவே இருந்தாலும்
இன்னும் அழகாகிறேன்
உன் ஆனந்தக்கண்ணீரில்
நான் நனையும் போதேல்லாம்
படைத்தவனுக்கு தெரியவில்லை
அவனைவிட அழகாய்
நீ இந்த உலகத்தை
படைக்கப்போகிறாய் என்று ......
தெரிந்திருந்தால் பிறந்திருப்பான்
உன் மடியில் இடம்பிடிக்க
பிரம்மனிடம் அடம்பிடித்து .....!
உன் இரு கைகளில்
இருக்கும்போதுதான்
உயிர்க்கொண்ட பொம்மையாகிறேன்
உன்னைப்பார்த்து சிரிக்கும்போதுதான்
உயிருள்ள கடவுளையே
கண்ணெதிரில் காண்கிறேன் ....!!!
இந்த உலகில் நான்
வளரும்வரைதான்
ரசிக்கப்படுகிறேன் - உன்னால்
மட்டுமே
வாழும்வரை நினைக்கப்படுகிறேன்....!!
கவிதாயினி நிலாபாரதி !!
சுமக்கும்வரை மட்டும் தெய்வமில்லை..
நம்மை நினைக்கும்வரை தெய்வங்கள்தான்...
அன்னையும் தந்தையும் !!!
நம்மை நினைக்கும்வரை தெய்வங்கள்தான்...
அன்னையும் தந்தையும் !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக