மழையை எதிர்ப்பார்த்து
கரைய காத்திருக்கும் மண் மேடாய்
உன்னை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறது
காதல்கொண்ட மனமும் விழியும் .....
நீ இல்லா
இப்போதைய நிலை
இலையுதிர்காலமாகிப்போகிறது
என் வாழ்நாளில் .....
பூக்கள் பூக்குமென்றுதான்
விதைகள் இட்டுவைக்கிறேன்
விடியலின் விழிப்பாதையில் ......
நீயோ
என்னை நோகடிப்பதற்காக
உன்னையே சாகடிக்கிறாய் ....
பூக்காமலும் பார்க்காமலும் ........!!
கட்டியணைத்தப்படி
உறங்கிக்கொண்டிருக்கிறேன்
தலையணையாய் நீ..!!
என் கனவில்
ஒருமுறையேனும் வந்து போ
உன்னருகில் நானிருப்பதுபோல் .....
தூங்கிப்போகும் நேரத்திலும்
தூசுத்தட்டி எழுப்புதடி
புதைப்பொருளான உன் நினைவு
என் பாட்டன் எழுதிவைத்த
பவள வரிகள் பிடித்ததடி
உன்னை நினைத்துவிட்ட
அரை நொடியின் ஆரம்பத்திலிருந்து ......
" என் கண்ணின் பாவையன்றோ ......கண்ணம்மா
என் உயிர் நின்னதன்றோ " ........................................
கவிதாயினி நிலாபாரதி
கரைய காத்திருக்கும் மண் மேடாய்
உன்னை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறது
காதல்கொண்ட மனமும் விழியும் .....
நீ இல்லா
இப்போதைய நிலை
இலையுதிர்காலமாகிப்போகிறது
என் வாழ்நாளில் .....
பூக்கள் பூக்குமென்றுதான்
விதைகள் இட்டுவைக்கிறேன்
விடியலின் விழிப்பாதையில் ......
நீயோ
என்னை நோகடிப்பதற்காக
உன்னையே சாகடிக்கிறாய் ....
பூக்காமலும் பார்க்காமலும் ........!!
கட்டியணைத்தப்படி
உறங்கிக்கொண்டிருக்கிறேன்
தலையணையாய் நீ..!!
என் கனவில்
ஒருமுறையேனும் வந்து போ
உன்னருகில் நானிருப்பதுபோல் .....
தூங்கிப்போகும் நேரத்திலும்
தூசுத்தட்டி எழுப்புதடி
புதைப்பொருளான உன் நினைவு
என் பாட்டன் எழுதிவைத்த
பவள வரிகள் பிடித்ததடி
உன்னை நினைத்துவிட்ட
அரை நொடியின் ஆரம்பத்திலிருந்து ......
" என் கண்ணின் பாவையன்றோ ......கண்ணம்மா
என் உயிர் நின்னதன்றோ " ........................................
கவிதாயினி நிலாபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக