வார்த்தைகளால் வசீகரிக்கிறாய்
வலைவீசாமல் மாட்டிக்கொள்கிறேன்
துடிப்பதற்க்காகவே
தூண்டில் இடுகிறாய்
தறியின் கரம்பிடித்த நூலாய்
விலக மனமின்றி
உறவாடிக்கொண்டே இருக்கிறேன்
உயிரின் ஊடாக......
ஏகாந்த அலைகளை
எழுப்பிக்கொண்டே போகிறாய்
இசையென எண்ணி
இரைச்சல்களையும்
ரசித்துக்கொண்டிருக்கிறது மனம்
ஊசித்துளைக்காத
உயிரையும் துளைத்து
நீ நுழைந்தாய்
ஒரு வ(லி)ழியும் இல்லாமல்...!!
வீட்டுக்கு வந்த
விருந்தாளியைப் பற்றிக்கொண்டு
விடாமல் அழும் குழந்தையாய்
உனைப்பற்றி
குழறிக் குழறி கெஞ்சுதடி
குரல்வளையும்
என் உயிர்வளியும்!!
என்னை விட்டு
எப்போது நீ போகிறாயோ
அந்நொடியில்
உன்னோடே வந்துவிட
உயிர்
பயிற்சி எடுக்குதடி
ஒவ்வொருமுறையும்
வெளிவந்து .......
கவிதாயினி நிலாபாரதி
அருமை...
பதிலளிநீக்குஎன் வலையிணைப்பில் சேர்த்திருக்கிறேன். தொடர்ந்து வெளுத்து வாங்கிட வாழ்த்துகள்..
பதிலளிநீக்குஉனைப்பற்றி
பதிலளிநீக்குகுழறிக் குழறி கெஞ்சுதடி
குரல்வளையும்
என் உயிர்வளியும்!!“
அட இது புதுசா, நல்லா இருக்கே?
ஆண்குரலில் பெண்? (எல்லாம் ஒரு பாதுகாப்புத்தான?)
கண்டுபிடிச்சுட்டீங்க
நீக்குஅற்புதம்....
பதிலளிநீக்குமீண்டும் மீண்டும் படித்து இரசித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி
நீக்குஎன்ன ஆச்சு? நாலு நாளாச்சு அடுத்த பதிவு என்னாச்சும்ா?
பதிலளிநீக்கு