வானம் தொலைத்த பறவையாகிறாய்!
நீ தனிமைக்கடலில் மூழ்கிப்போகிறாய்
தொடர்பு நூலினை அறுத்தெறிந்து
தொலைவுக்கு அப்பால்
தொலைந்தும், தொலையாமலும் நீ
இக்கட்டுகள் இறுகக்கட்டிய இதயத்துடன் நீ
மிதப்பதா ? கிடப்பதா? எனத்தெரியாமல்
இந்த ஒற்றைச்சிறகு!
எங்கும் சுற்றி திசைத்திரும்பும்
குளிர்காற்றென
திரும்பிவா
வற்றாக்கடலென நிரப்பிவைத்திருக்கிறேன்
என் நேசமதனை..
நின்பயணம் கரைசேருமென
காத்திருக்கிறேன்
எப்பொழுதும்
உன் வருகையைத்தேடி!
நம்பிக்கை தான் வாழ்க்கை...
பதிலளிநீக்கு