ஞாயிறு, 13 மார்ச், 2016

சிறகைத்தேடி

வானம் தொலைத்த பறவையாகிறாய்!

நீ தனிமைக்கடலில்  மூழ்கிப்போகிறாய்

தொடர்பு நூலினை அறுத்தெறிந்து
தொலைவுக்கு அப்பால்
தொலைந்தும், தொலையாமலும் நீ

இக்கட்டுகள் இறுகக்கட்டிய இதயத்துடன் நீ

மிதப்பதா  ? கிடப்பதா? எனத்தெரியாமல் 
இந்த ஒற்றைச்சிறகு!

எங்கும் சுற்றி திசைத்திரும்பும்
குளிர்காற்றென

திரும்பிவா
வற்றாக்கடலென நிரப்பிவைத்திருக்கிறேன்
என் நேசமதனை..

நின்பயணம் கரைசேருமென
காத்திருக்கிறேன் 
எப்பொழுதும்
உன் வருகையைத்தேடி!

1 கருத்து: