திங்கள், 15 பிப்ரவரி, 2016

தனக்கென முயலுநர்

ஐந்தாண்டுகளாக எங்கள் குறைகள் அரசால் தீர்க்கப்படவில்லை
ஊதியமுரண்பாடுகளை களைய வற்புறுத்தி 20அம்ச கோரிக்கைகளுடன்
அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம்!  - செய்தி!

அரசு செய்தது சரியே!

பட்டினிகிடப்பவனின் வலியை உங்களுக்கும் பசி வந்தால் தான் உணர்வீர்களெனில்
உங்களை பசியோடு வைத்திருக்கலாம் தவறில்லை
அரசு இயந்திரசக்கரங்களே!

விளைந்தநெல்லுக்கு சரியான விலையில்லை!
பிழிந்த கரும்பின் சக்கையாக தூக்கியெறியப்பட்டிருக்கும் வறுமை எனும் எறும்புகளால் அரித்துதின்னப்படும் நாங்கள்!

காடுவிற்று ,கழனி விற்று கல்விக்கு கட்டியத்தொகைக்கு வழியின்றி கந்துவட்டிக்காரனிடம் அடமானமாய் எங்கள் தன்மானம்

படித்தவர்களுக்கு வருவாய்க்கு வழியின்றி வயிற்றை நிரப்பிக்கொள்ள ஏதோ ஒரு வேலையெனும் அடிமைத்தனம்!

எல்லாவற்றுக்கும் மேலாய் எங்களுயிரை குடிக்கும் டாஸ்மாக்,  மீத்தேன்,  வயலுக்கு வலைவிரித்து கெயிலும் இப்போதைக்கு இறுதியாய்!

இவற்றுக்கெல்லாம் வலிக்காத உறைக்காத உங்கள் சதையா ஊதியத்தின் உயர்வுக்காய் மட்டும் உரத்தசத்தமாய் அழுகிறது!

நான் பட்டினியில் அழுது சாகிறோம்
நீங்கள் உங்கள் பரம்பரைக்கு போதவில்லை என்று போராடுகிறீர்கள்

வயிறும் வயலும் உயிருக்கும் மிஞ்சியதாய் இந்த பூமியில்           ஒரு மயிரளவு கூட எஞ்சியது எதுவுமில்லை

உணருங்கள்  எம் கேளிரே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக