என் உலகத்தின்
உருண்டையில்
எந்ததிசையில் நீ நிற்கிறாய்!
எந்ததேடுதலிலும் தோற்றுப்போகிறேன் உன்னைமுழுமையாக கண்டடையமுடியாமல்
ஆழ்கடலில் முக்குளித்தும் தேடுகிறேன்
அலைபரப்பின் மேல்விழுந்து சிப்பிக்குள் உறையும்
மழைத்துளி நீ என அறியாமல்!
காகிதம் படித்தவன் மட்டுமல்ல
காதலையும் களங்கமற
படித்தவன் நீ!
அத்தனைசுகங்களையும்
அன்பால் தந்து அணைத்தவன் நீ
புறச்சூழல்களால் புறக்கணிக்கப்படுவதாய் காரணிகள் பல சொல்லி
என் காயங்களுக்கு நீயே வாள்சுழற்றுகிறாய்!
சத்தமிடத்துணியாமல் சரணடைகிறேன்
சாகும் நிலையிலும் நரைக்காது உனக்கு என்மீதான காதல்!
நம்பிக்கை நங்கூரமிடுகிறது நகரும் இந்தநாட்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக