வியாழன், 31 டிசம்பர், 2015

புத்தாண்டே வருக

என் வாழ்வில் எத்தனயோ தடுமாற்றங்கள் ஏமாற்றங்களை தந்த இந்த ஆண்டு மறக்கமுடியாத மனிதர்களையும் நண்பர்களையும் முன்னேற்றங்களையும் தந்துள்ளது
என்பதில் பெருமையடைகிறேன்
வருக
வசந்தமெனும் கனாக்காலமே
முகநூல் உண்மையாகவே இவ்வளவு அன்பை அள்ளித்தரும் அட்சயபாத்திரமா?
தேய்க்க தேய்க்க புதையல்களை புன்னகைகளை பரிசளிக்கும் அலாவுதீனின் அற்புத விளக்கா?
அன்பை,  நட்பை,  நேசத்தை அளவில்லாமல் கொட்டிதந்துவிட்டுப்போகும்
காட்சிகுழந்தையென கடக்கவே முடியாமல்

கடந்த வருடத்தைக்காட்டிலும்
இந்த வருடம் இழப்புகள் அதிகம்
எனினும் எதையும் தாங்கும் வலிமைகூட்டியிருக்கிறது  இவ்வருடம் .

எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் பரிசளித்திருந்தாலும் அதைக்காட்டிலும்
அன்பையும் நம்பிக்கையையும்  பகிர்ந்தளித்த நட்புகளையும் உறவுகளையும் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்!

எதிர்பாராமல் ஏற்பட்ட உடல்நலக்கோளாறு ஒட்டுமொத்தமாய் எனை சிதைத்துப்போட்ட நிலையிலும்
சிரமேற்று எனைத்தாங்கிய என்பந்தங்களும் உறவுகளும் கைக்கொடுத்தாலும்
என்னை தன்னைப்போல் எண்ணி பார்த்து மீண்டும் இயல்பாய் இயங்கவைத்த தோழி மதுரைசத்யப்ரியாவுக்கு அவளது குடும்பத்துக்கும்  என்முழு நன்றிகளை உரித்தாக்குகிறேன். (நன்றிமறப்பதுநன்றன்று)
அத்துடன் கடந்தவருட பட்டியலில் மட்டுமல்லாது மனதில் இன்றளவும் நீங்காது நிறைந்திருக்கும்
முகநூல் நண்பர்கள்,  எனது அலுவலக சகாக்கள் மற்றும் உறவுகளை புதுப்பிக்க வாய்ப்பளித்த அத்தனை பேரின் அக்கறையிலும் இன்றும் சுகமே!

அபாயத்தின்போது அபயக்கரம் தந்து உபாயம் செய்த ஒவ்வொரு முகநூல்  முகமறியா தோழமைகளுக்கும் 
வரும் பனிரெண்டு மாதங்கள்  வசந்தமாய் மாறட்டும் என வாழ்த்துகிறேன் மனமார!

மறக்கவே முடியாத மனிதர்களில் நண்பர்களில் மனதை நிறைத்துக்கொண்டவர்கள்

இந்தவருடம்

வலங்கைமான் நூர்தீன்
சுதாமகேசுவரிசுதா
மெளலிபோபன்
கவி.வளநாடன்
சுப்ரா வே.சுப்ரமணியன்
ஆரூர் செ.கர்ணா
முகில்நிலா
எழில்அருள்
வைகறை வைகறை
பூபாலன்
சோலைமாயவன்
புன்னகை அம்சப்ரியா

பெருவெள்ளத்தில் கிடைத்த முத்துக்கள்
அகிலா புகழ்
சுபாஹரண்
வேதா நாயக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக