ஞாயிறு, 27 டிசம்பர், 2015

துளித்துளியாய் ஒரு பெருவெள்ளம்

*
ஆர்ப்பரித்த அலை
அடங்கிப் போனது
ஆறறிவும் ஐம்புலன்களும்
அரைநொடிக்குள்!

*
அத்தனை மன்னர்களும்
அசந்துபோகும் அசாத்தியம்
அமைதியான
உன் போர்ப்பயணம்!

*
நீ கரையேறுகிறாய்
மூழ்கிப்போகிறோம்
நாங்கள்!

*
ஊன் புசித்த நாங்கள்
உன் எதிர்வினையாய்
எங்கள்
உயிர்புசித்தாய் நீ!

*
வெற்றியாளர்களின்
வெற்றியிடத்தை
வெற்றிடமாய் ஆக்கிப்போனாய் நீ!

*
ஓடியதென்னவோ நாங்கள்
ஜெயித்ததென்னவோ
கால்களில்லா நீ!

*
பல ஆண்டுகளாக
மழைபெய்யாத சோகத்தை
தீர்த்தது .....
தீராமல் பொழியும்
எங்கள் கண்ணீர்!

கவிதாயினி நிலாபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக