புதன், 16 டிசம்பர், 2015

இன்றும் காத்திருக்கிறேன்

பூட்டிய கதவு ..
திறந்திருக்கும் வாசல்
துாரத்து உறவுகளுக்கு
துாண்டில் பாலமாய் நீ !

காதலோடு உன்னில்
சேர்கையில் ஒட்டிக்கொள்கின்றன
காகிதங்கள்...
உயிரூற்றிய எச்சில்
வாசங்களில் !

எத்தனையோ இடம் மாறி,
இனம் மாறி உன்னால்
இதயம் மாற்றிக்கொண்ட காதலர்கள்
மோதிக்கொண்டதில்லை....
வீதிகளில் சாதிகளால்!

திறந்திருந்தும்
இரகசியங்கள் திறவாத
அளவான குறுவாய் - உன்
அழகிய செவ்வாய்!

கவனிப்பார் யாருமற்றபோதும்
அத்தனையும் வாங்கிக்கொண்டு
அழகாய்ச்சிரிக்கும்
பொக்கைவாய்க்குழந்தை நீ !

உன்னைப்போலவே
நானும்
கடிதங்களை இழந்த காதலியாக
கவிதைகளை இழந்து நிற்கிறேன்
பூட்டிய கனவுகளுடன்......

கவிதாயினி நிலாபாரதி

1 கருத்து: