கடல் அன்னையே!
நான்
குழந்தையாய் பிறந்ததின்
குற்றமென்ன?
பெற்றவள் அணைக்குமுன்
என்னை அழிக்கத்துடித்ததென்ன?
உன் கோரப்பசியின்
கொடூர விரல்களுக்கு
குழந்தையின் குரல்வளையா
உணவாய் கிடைத்தது?
என்னைப் பெற்றெடுக்க
தாய்பட்ட வலியைவிட
நீ
சவமாய் என்னை பிரித்தெடுக்கையில்
அவள் பட்ட வேதனைதான் அதிகம்
முத்துக்களை பிரிக்கும் உன்னில்
சிறு மொட்டுக்களின் உயிர் பறிக்க
உனக்கேன் ஆசை?
மடிந்தபின்னும்
மரண ஓசைக்கு ஓய்வில்லை
குரல்களில் ஈரமில்லை
எல்லாம் வற்றிவிட்டது
மண்ணிலா ?
உன்னிலா?
கவிதாயினி நிலாபாரதி
2004 -ம் சுனாமி பாதிப்பின் போது டிசம்பர் 26- அன்று நான் எழுதிய மழலைகளின் மரணத்தின் போது கவிதை இது......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக