செவ்வாய், 15 டிசம்பர், 2015

மடையனை கொளுத்துவோம்

என் பாட்டு எனது உரிமை என்று எகத்தாளமாய் பேசுபவனை எழுத்துக்களால் உணரவைப்போம்
பெண் உனது உரிமைஇல்லையடா பித்துமனம்கொண்டவனே என்று!

லூசு பெண்ணே லூசு  பெண்ணே என்று பாடி காசுசேர்த்த கயவனே!
தூசு என்று நீ நினைத்தபெண்மையினால் தூர்வாரப்படப்போகிறாயாடா துச்சாதனனே!
துளியும் அச்சமில்லை
துணிந்துவிட்டோம் எங்கும் நாங்கள்
முடிந்தால் நின்றுபாரடா உன்     மூச்சுக்காற்றை எங்குவிடுவதென்று
பெற்றக்கொடுமைக்காக பிறந்தகொடுமைக்காக
உன்வீட்டு பெண்மை அதே வார்த்தைகளால் அர்ச்சிக்கப்படுவது உனக்கு அருவெறுப்பாய் தோன்றவில்லையா?
நீயும் ஒரு பெண்ணோடுதான் வாழப்போகிறாய்
வாழ்த்துக்களுக்குபதிலாக  அர்ச்சனைகள் வாங்கிவிடாதே அசிங்கமான வார்த்தைகளால்!
அழிக்கவேமுடியாத கறைகள் ஆயுளுக்கும்
அவைதான் உனக்கு
ஆயுள்தண்டனையாகவும் மாறக்கூடும் !

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்! 
சிறுபொறி கிளம்பியுள்ளது தீப்பற்றிஎரியட்டும்
சில்லரைமூடர்களின் சினிமாகூடம்!

2 கருத்துகள்:

  1. மடையன் . சிம்பு என்வே எல்லோரும்
    எழுத்தத் துவங்கலாம்

    அனல் பற்க்கும் அற்புதமான பதிவு
    இன்றைய நிலையில் அவசியமான பதிவும் கூட..

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு