திங்கள், 23 நவம்பர், 2015

புயலாய் கடந்த நீ

நீரும் காற்றும் 
நிரம்பிய குமிழியாய்
இரண்டற 
எனக்குள் நீ!

உடைபடுவதென்னவோ நான்தான் உன் நிறமிழக்காத நினைவுகளால்

என்றோ ஒருநாள் 
துளியென விழுந்த  நீதான் 
இன்றைய  அடைமழையென 
நனைத்துக்கொண்டிருக்கிறாய்!

வழிந்தும் வற்றிவிடாத 
மழைத்துளி நினைவுகளால் 
உலரமறுக்கிறது  
ஈரம் ஈர்த்த களிமண் இதயம்

சலனமற்று  கவனமற்று  எனைக்கடந்துப்போகிறாய் 
சுழலத்தொடங்கியது எனக்குள் 
சூறாவளியும் பெரும்புயலும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக