மனிதனுக்கு மறந்தும்போகும்
மரத்துப்போகும்
மழைநடத்தும் பாடங்கள்
நீச்சலடிப்பதையும்
நீர்பிடிப்பதையும் மறந்தே போனோம்
தத்தளிக்கிறோம்
தண்ணீருக்காய் தண்ணீரில்
ஆற்றில் குளித்து ஆயுள் வளர்த்தவர்கள்
ஆற்றை தூர்த்து அடுக்குமாடி நட்டவர்களாக மாறிப்போனார்கள்
ஆயிரம்முறை கூடி ஆய்வு நடத்தியவர்கள் காதுகளுக்கு ஆற்றின் காலடியோசை கேட்டதேயில்லை இதுவரை
மணல்லாரிகளில் அழுதபடி ஓடிக்கொண்டேஆறுகளின்
அலறல்களை
அரைநொடியேனும் கேட்டதுண்டா?
அபயக்குரலின் அழுகை மட்டும்
ஆகாயத்திற்கு எப்படிகேட்கும்?
மிதக்கும் மனிதர்கள்
மூழ்கிப்போன கட்டிடங்கள்
நீரைகிழித்துச்செல்லும் இயந்திரபடகுகள்
கரைகளில் நின்றபடி கரையேறவழியின்றி
கண்ணீரிலும் தவிக்கும் மக்கள்
தீயணைப்பு, ராணுவம்,
பேரிடர் மேலாண்மை இன்னும்பிற
எப்படியோ?
ஆட்களை மட்டுமல்ல
ஆறுகளையும் ஏரிகளையும்
எப்படியாவது காப்பாற்றிவிடுங்கள்
தொப்புள் கொடிகளை அறுத்துவிட்டு தொடர்பில்லை சொல்லாதீர்கள்
ஏனெனில்
நீர்சூழ் உலகு மாறவும்கூடும்
போர்சூழ் உலகாகவும் !
அடடா....புயல்....
பதிலளிநீக்குநன்றி கவிஞரே!
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு