1.அலாரமில்லாத துயிலெழுதல்
2.பரபரப்பில்லாத அடுக்களை.
3.அவசரகதியில்லா காலை உணவு
4.நெரிசலில்லா பேருந்து பயணம்
5.சேறும் சகதியுமாகாத மழைநீர்
6.ஒழுகாத ஓட்டுப்பள்ளிக்கூடம்
7. அதட்டலில்லாத ஆசிரியை
8.ஒருவேளையாவது விரும்பிய
உணவு
9.விழிக்கும்முன்னே விடுமுறை
அறிவிப்பு
10. மணியடித்ததும் எட்டிபிடிக்கும் தூரத்தில் வீடும் வானும் ...!
இத்தனைகனவுகளை சுமந்ததாய் புத்தகமூட்டையுடன்
எனது பயணத்தை இலேசாக்குகிறது
கதவோரத்தில் நின்று கையசைத்து சிரிக்கும் குழந்தை!
அனைத்தும் அருமை...
பதிலளிநீக்குவாழ்த்துகள்...
நன்றி!
பதிலளிநீக்குநன்றி!
பதிலளிநீக்கு