என்னில் சுழல்கிறாய்
என்னைச் சுழலவும் வைக்கிறாய்
சேய்விரலாய் தாய்க்கரமாய்
தீண்டிப்போகிறாய்
புலர்வெயில் தொடும் பனியென உருகிப்போகிறேன் - உன் பெயரிடப்படாத பேரன்பில்!
நினைவுகளை உன் விரல்களாய் பற்றிக்கொண்டு நடைபயில்கிறேன்
நீள்கிறது நெடுஞ்சாலையென
என்கனவுப்பயணம்!
தீப்பற்றி எரியாத நினைவில்
தீண்டும் நிலை தொடராத உறவில்
இறுகப்பற்றிக்கொள்கிறேன்
விலகாப்பிடியாய்!
இதுவரை நம்பவில்லை
இறைவனாய் முழுதாய்
இனியோர் வேண்டுதல்
புதிதாய் அவனிடம்
இறக்கும் நிலையினும்
உன்னை இழத்தல் என்பது
நிகழவே கூடாதென்பதே!
//நினைவுகளை உன் விரல்களாய் பற்றிக்கொண்டு நடைபயில்கிறேன்//
பதிலளிநீக்குஎத்தனை அன்பை வெளிப்படுத்துகின்றன இவ்வரிகள்